“தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்”காரோனோ குறித்த பாடல் !!
கொரோனா காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே 6500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் 500கும் அதிகமான பாதிப்புகளை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே இந்த நோயின் தாக்கத்தைக் கண்டு கலங்கிப்போய் உள்ள நிலையில் இந்திய அரசும் தன்னால் ஆனால் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் நாளை முதல் குறிப்பிட்ட வழித்தடங்களில் பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டும் என்று அதிகாரப்பூர்வமாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் கவிஞர் வைரமுத்து இந்த கொரோனா குறித்த ஒரு பாடலை எழுதினார். அந்த பாடலுக்கு அழகாக மெட்டமைத்துப் பாடினார் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன். இதனை அடுத்து தற்போது வைரமுத்து கொரோனா குறித்து ஒரு கவிதையை எழுதி அவரே வாசித்து அண்ட் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்”, என்று தொடங்கும் அந்த கவிதை படைப்பில் கொரோனா மக்களுக்கும் இயற்கைக்கும் தந்த நன்மை தீமைகளை பற்றி அவர் கவிதை வரைந்துள்ளார். இணையத்தில் இந்த கவிதை இப்போது வைரலாகி வருகின்றது. தற்போது இந்த பாடல்லை கவிஞர் வைரமுத்து ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்!!