நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது !!
இது குறித்து உயர்நிதி மன்றத்தில் ட்ரைடன்ட் ஆர்ட் ரவி வழக்கு தொடர்ந்தார். நடிகர் விஷால் தயாரிப்பில் உருவான சக்ரா கதையை அப்படத்தின் இயக்குனர் ஆனந்தன் தன்னிடம் தெரிவித்து படத்தை தயாரிக்குமாறு ஒப்பந்தம் போட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது விஷால் தயாரிப்பில் படம் உருவாகி உள்ளது. இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்று மனுவில் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் சக்ரா படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து விஷால் மற்றும் படத்தின் இயக்குனர் பதிலளிக்க வேண்டும் என்று வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.