கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர். கலைத்துறையினர் வீட்டில் உள்ளனர். வீட்டில் உள்ள கதாநாயகிகள் தங்களுடைய ரசிகர்கள் இடையே இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பேசுவது உண்டு. அப்படி நேற்று மாஸ்டர் பட கதாநாயகி மாளவிகா மோகன் ரசிகர்கள் இடையே பேசினார்
அப்போது அவர் மாஸ்டர் படத்தில் தன் அனுபவங்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தார்.
அவர் கூறுகையில் மாஸ்டர் படம் படப்பிடிப்பின் போது, “நான் லோகேசை டார்ச்சர் செய்து என் வசனத்தை இரண்டு வாரங்களுக்கு முன்கூட்டியே பெற்றுக்கொள்வேன், பெற்று கொண்ட வசனத்தை வீட்டில் வைத்து நன்றாக படித்து பார்ப்பேன். பின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சரியான எமோஷனில் அந்த டைலாக்கை பேசுவேன்” விஜய் உடன் நடித்தது முற்றிலும் வேறு ஒரு அனுபவத்தை குடுத்தது, மேலும் தமிழில் நான் நடிக்கும் இரண்டாவது படம் மாஸ்டர் இன்று பேசியிருந்தார்.