இந்திய சினிமாவை உலகரங்கம் திரும்பி பார்க்கவைத்த படம் என்றால் அது பாகுபலி தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது. பாகுபலி முதல் பாகம் மக்களை கட்டி போட்டது, “கட்டப்பா எதற்காக பாகுபலியை கொன்றார்” எந்த மில்லியன் டாலர் கேள்விக்கான பதிலை மக்கள் பாகுபலி பாகம்- 2ல் பார்த்து மகிழ்ந்தனர். படமும் வசூல் சாதனை படைத்தது. பாகுபலிக்கு பின்னே தான் படத்தின் இயக்குனரான ராஜமௌலியும், நடிகர் பிரபாஸும் வெளியே தெரியவந்தனர் என்று கூட சொல்லலாம்.
தற்போது ராஜமௌலி RRR என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் மிக தீவிரமாக பரவுகிறது. பாகுபலி மூன்றாம் பாகத்தை ராஜமௌலி இயக்க தயாராக இருக்கிறார் என்பதே அந்த தகவல். ஆனால் படம் Netflix என்ற OTT தளத்தில் வெளியாகும் என்கிறார்கள். பாகுபலி பாகம் மூன்று ஒன்பது எபிசோடுகளாக எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகிறது. Game of thrones போல தமிழில் பாகம் மூன்று இருக்கும் என்று கூறப்படுகிறது