ப்ளூ ஸ்டார் கதை
1998-ம் வருடம், அரக்கோணத்தில் ரஞ்சித் என்கிறவனுக்கு, கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. அவன் ப்ளூ ஸ்டார் என்கிற டீமை வைத்துள்ளான். இவனைப்போலவே, அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவன் ஆல்பா பாய்ஸ் என்கிற டீமை வைத்திருக்கிறான், இந்த இரண்டு டீமுக்கும் பல வருட பகை இருக்கிறது.
Read Also: Thookudurai Tamil Movie Review
அந்த ஊரின் கோவில் திருவிழாவின் போது இரண்டு டீமும் விளையாடும்போது, ப்ளூ ஸ்டார் டீம் தோல்வியடைந்தது. அதன் பிறகு ஒரு போட்டியின்போது இரண்டு அணியும் சேர்ந்து விளையாட கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. கடைசியில் இந்த இரண்டு அணிகளும் இணைந்து விளையாடினார்களா? இல்லையா? என்பதும், இவர்களையும், இந்த கிரிக்கெட்டையும் சுற்றி நடக்கும் அரசியல் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡ரஞ்சித்& ராஜேஷாக வாழ்ந்த அசோக்& சாந்தனு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡அரசியல் பேசும் வசனங்கள்
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் இரண்டாம்பாதியின் நீளம்
Rating: ( 3.25/5 )