மக்களுக்கு குறைந்த விலையில் உணவு அளிக்கும் கார்த்தி ரசிகர் மன்றம்

10 ரூபாய் சாப்பாடு!
இன்று 400-வது நாள்.
நடிகர் கார்த்தியின் மக்கள் நல மன்றம் கொண்டாட்டம்.

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ரூ.50 மதிப்புள்ள பிரிஞ்சி சாதம் ரூ.10-க்கு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள்; குறிப்பாக ஸ்விக்கி, ஜூமோட்டோ டெலிவரி பாய்கள் என்று 100க்கும் அதிகமானோர் உணவு உட்கொண்டு பயன் பெற்று வருகிறார்கள்.

தினசரி மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை இந்த உணவகம் செயல்படுகிறது.
(ஞாயிற்றுக்கிழமை மட்டும் விடுமுறை)

இந்த உணவகத்தின்
400-வது நாள் இன்று (29.11.22) கொண்டாடப்பட்டது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here