விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு செலுத்த வேண்டிய வரி குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த தீர்ப்பு பரபரப்பாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டு வருகிறது. விஜய்க்கு ஆதரவாக அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் பலரும் விஜய்க்கு எதிராக சமூக வலைதளங்களில் சிலரும் தொடர்ச்சியாக பதிவு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் இது குறித்து ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அன்பு தம்பி விஜய் அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது என்றும், துணிந்து நில் என்றும், இது அவதூறு தானே ஒழிய குற்றம் இல்லை என்றும், தொடர்ந்து செல் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.