குழந்தைகள் முன்னேற்ற கழகம் கதை
கதையின் ஆரம்பத்தில் ஆவடியை தனி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேயர் பதவிக்கு அரசியல்வாதி பக்கிரிசாமி சாமியின் கட்சியான குடிமக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் யார் போட்டியிடுவது என்ற இருவரின் சண்டையில் இருவரையும் சுயேட்சையாக நிற்க சொல்கிறார் பக்கிரிசாமி. ஆதிமூலம் மனைவியும் , சாணக்கியா என்பவரின் மனைவியும் போட்டியிட ஆதிமூலம் மனைவி வென்று மேயர் ஆகிவிடுகிறார். ஆனால் சாணக்கியாவிற்கும் அவரின் மனைவிக்கும் இந்த தோல்வியை தாங்கமுடியவில்லை.
Read Also: Vallan Tamil Movie Review
ஆதிமூலத்தின் மகன் பல்லவன், பக்கிரி சாமியின் பள்ளியில் படிக்கிறான். இவன் பள்ளியில் SPL பொறுப்புக்கு போட்டியிடுகிறான் அதே சமயம், ஆதிமூலத்தின் கள்ளக்காதலிக்கு பிறந்த அலெக்ஸாண்டர். பல்லவனை தோற்கடிக்க திட்டம் போடுகிறான். பல்லவனுக்கும், அலெக்ஸாண்டருக்கும் இடையில் நடக்கும் போட்டியில் யார்தான் SPL போட்டியில் வென்றார்? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை ( சமீபத்தில் மறைந்த ) இயக்குனர் சங்கர் தயாள் இயக்கியுள்ளார்.