ஆடுஜீவிதம்- தி கோட் லைஃப் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஆடுஜீவிதம்- தி கோட் லைஃப் கதை

கதையின் நாயகன் நஜீப் பண பிரச்சனை காரணமாக, வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். அதற்காக பணத்தை திரட்டி வெளிநாடு செல்கிறார், நஜீப் உடன் அகிம் என்ற பையனும் செல்கிறான். இவர்கள் இருவரும் ஹெல்பர் வேலைக்காக சென்றிருப்பார்கள். ஆனால் இவர்களை ஆடுமேய்க்கவும், ஒட்டகம் மேய்க்கவும் சொல்கிறார்கள். இவர்கள் இருவரையும் தனித்தனி இடத்தில் வேலைக்கு வைக்கிறார்கள்.

நஜீப் அவர்களின் மொழி புரியாமல் கஷ்டப்படுகிறான், மற்றும் உணவு தராமல், தண்ணீர் தராமல் கொடுமை படுத்துகிறார்கள். அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் அவர்களிடம் மாட்டி அடி உதை வாங்குகிறார். பிறகு பல நாட்கள் கழித்து நஜீப், அகிம் இருவரும், ஒருவரின் உதவியுடன் தப்பிக்க முயற்சிக்கிறார்கள், இவர்கள் இருவரும் கடைசியில் தப்பித்தார்களா? இல்லையா? என்பதும் இதற்கிடையில் இவர்கள் என்னென்ன கஷ்டப்பட்டார்கள் என்பதே படத்தின் மீதி கதை…

ஓர் உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் எழுத்தாளர் பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் என்ற புத்தகத்தின் கதையை வைத்து, திரைக்கதை எழுதி மிக சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குனர் பிளஸி.

படத்தில் சிறப்பானவை

➡நஜீப் ஆகவே வாழ்ந்த ப்ரிதிவிராஜ் நடிப்பு
➡மற்ற அனைவரின் எதார்த்த நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡ஒலி வடிவமைப்பு
➡படத்தொகுப்பு

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் கதைக்களம்

Rating: ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *