ஆரகன் கதை
கதையின் ஆரம்பத்தில் ஒரு அரசன், முனிவரிடம் சீடனாக சேருகிறான். ஒருநாள் முனிவர் ஆழ்ந்த தவத்தில் இருக்கும்போது. ஒரு பாம்பு அவரை கடிக்க வருகிறது. அதனை பார்த்த சீடன் முனிவரை காப்பாற்ற அந்த பாம்பை பிடிக்கும்போது பாம்பு கடித்துவிடுகிறது. பிறகு தியானத்திலிருந்து எழுந்த முனிவர், சீடனை காப்பாற்றி தன்உயிரை காப்பாற்றியதால் சீடனிடம் என்ன வேண்டும் என்று கேட்கிறார்.
Read Also: Neela Nira Sooriyan Tamil Movie Review
கதையின் நாயகன் மற்றும் கதையின் நாயகி இருவரும் காதலிக்கிறார்கள். நாயகி திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறார். அப்போது நாயகன் தான் சொந்த தொழில் தொடங்க இருப்பதாகவும், அதற்கு பணம் குறைவாக இருப்பதையும் சொல்கிறான். தொழில் தொடங்கிய பிறகுதான் திருமணம் என்று கூறிவிடுகிறார். அப்போது நாயகி வேலைக்கு சென்று பணம் தருவதாக சொல்கிறார். அப்படி நாயகி வேலைக்கு சென்றஇடத்தில என்ன ஆனது என்பதும், கதையின் ஆரம்பத்தில் நடந்த விஷயத்திற்கும் தற்போது நடக்கும் விஷயத்திற்கும் என்ன சம்மந்தம் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் அருண் KR இயக்கியுள்ளார்.