அகத்தியா கதை
கதையின் ஆரம்பத்தில் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பங்களாவில், படப்பிடிப்பிற்காக செட் போடுகின்றனர். கதையின் நாயகன் அகத்தியாவிற்கு இது முதல் படம் என்பதால் தன் சொந்த செலவில் செட் போடுகிறார், ஆனால் கடைசி நிமிடத்தில் சில காரணங்களால் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது, இதனால் மனமுடைந்த அகத்தியா தன் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வருகிறார்.
Read Also: Sabdham Tamil Movie Review
கதையின் நாயகி மீனா, நாம் அந்த பங்களாவை Scary House ஆக மாற்றி பணம் சம்பாதிக்கலாம் என சொல்ல, அகத்தியாவும், நண்பர்களுடன் சேர்ந்து அந்த பங்களாவை Scary House ஆக மாற்றுகிறார்கள். பிறகு மக்களும் பல பேர் வருகிறார்கள். திடீரென்று அந்த Scary House இல் மர்மமான சில விஷயங்கள் நடக்கிறது. அந்த பங்களாவில் 1940 ல் ஏதோ ஒன்று நடந்துள்ளது, அது என்ன என்பதும், இந்த மர்மத்திற்கெல்லாம் காரணம் என்ன என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் பா. விஜய் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡யுவனின் பிண்ணனி இசை
➡படத்தொகுப்பு
➡VFX தொழில்நுட்பம்
➡விறுவிறுப்பான இரண்டாம்பாதி கதைக்களம்
➡கடைசி 20 நிமிட காட்சிகள்
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
➡மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
ரேட்டிங்: ( 3 / 5 )