பகாசூரனின் கதை
தெருக்கூத்து கலைஞராக இருக்கும் கதையின் நாயகன் செல்வராகவன் ஒருசிலரை தேடி கண்டுபிடித்து கொலை செய்கிறார், அதே சமயம் ஓய்வு பெற்ற அதிகாரியான நட்டி , குற்றம் செய்பவர்கள் எப்படி அந்த குற்றத்தை செய்தார்கள் என்று விளக்கமாக தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார். அப்போது நட்டியின் அண்ணன் மகள் மர்மமான முறையில் இறந்து போகிறார்.
அந்த கேஸை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார் நட்டி , இவர் செல்லுமிடமெல்லாம் ஒருசில விஷயங்கள் அவருக்கு கிடைத்துக்கொண்டே இருக்கிறது, அப்படி இவர் தேடி செல்லும் போது செல்வராகவனும் நட்டியும் சந்திக்க நேரிடுகிறது. இவர்கள் இருவரும் சந்தித்த பிறகு என்ன ஆயிற்று என்பதும், யார் அந்த பகாசூரன் என்பதே படத்தின் மீதி கதை…
இதனை இயக்குனர் மோகன் G அவருக்கே உண்டான பாணியில் கூறிஉள்ளார்.
படத்தில் சிறப்பானவை
செல்வராகவன் & நட்டியின் நடிப்பு
கதைக்கரு
சாம் CS பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
சுவாரசியமற்ற திரைக்கதை
Rating: ( 3/5 )