பிக் பாஸ் சீசனில் ‘தீபாவளி ‘ நிகழ்ச்சி மிக சிறப்பா போய்க்கொண்டிருக்கும் நேரத்தில். இன்று ஒவ்வொருவருக்கும் ஒரு சினிமா கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் அக்ஷாராவுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, அந்த வேடத்திற்கான வேலையை அவர் சரியாக செய்யவில்லை என அண்ணாச்சி கூறுகிறார், இதனால் அக்ஷாரா கண்கலங்கிய, பின் அண்ணாச்சியிடம் உங்க வயதுக்கு உங்களை சொடக்கு போட்டு கூப்பிட்டு பேச நான் விரும்பவில்லை என கூறுகிறார். அதற்கு பின்பு நடக்கின்ற சில சம்பவங்களை பார்த்தா. அண்ணாச்சி அப்படி எல்லோரும் இருக்கும்போதே பேசினது தப்பு என ராஜு கிட்ட சொல்றாங்க பிரியங்கா, ஆனா ராஜு அவங்க சொல்றத கொஞ்சகூட கேக்கவே இல்ல. அதற்கு பின்பு ஏதோ காரணத்தை சொல்லிட்டு அங்கிருந்த கெளம்பி அண்ணாச்சிடம் பொய் உக்காந்து பேசறார் ராஜு. அடுத்து பிரியங்கா அவங்க தனியா உக்காந்து இவங்ககிட்ட பேசினாலும் தப்பு , பேசாம இருந்தாலும் தப்பு என்று சொல்லி புலம்பிகிட்டே இருக்காங்க பிரியங்கா…