சில வருடங்களுக்கு முன்பு தனுஷ் என்னுடைய மகன் என்று மதுரை தம்பதியினர் தனுஷ் மற்றும் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா மீது வழக்கு தொடர்ந்திருந்தனர் அந்த தகவலும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது…
தனுஷ் என்னுடைய மகன் தான் என்று கஸ்தூரி ராஜா ஒருபக்கம் கூற மறுபக்கம் சிறுவயதிலேயே எங்களை விட்டு ஓடிவந்த என் மகன் தான் தனுஷ் என்று மதுரை தம்பதியினர் கூறினார் அது தொடர்பாக வழக்கும் நடந்து கொண்டிருந்ததுபிறகு அந்த வழக்கை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது
சில மாதங்கள் கழித்து கஸ்தூரி ராஜா மற்றும் தனுஷ் எங்களை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்று கூறி அந்த பிரச்சனையை மதுரை தம்பதியினர் ஆரமித்துள்ளனர்….
இந்நிலையில் தற்போது தனுஷ் மதுரை தம்பதியினருக்கு ஒரு நோட்டிஸ் அனுப்பியுள்ளார் அதில் அவர்கள் தொடர்ந்த குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் அப்படி மன்னிப்பு கூறாவிட்டால் மான நஷ்ட ஈடாக 10 கோடி பணம் தர வேண்டும் என்று தனுஷ் கூறியுள்ளார்