டைனோசர்ஸ் கதை
வடசென்னையில் இருக்கக்கூடிய இரண்டு தாதாக்கள் சலையார், கிள்ளியப்பன் இவர்களுக்குள் ஏற்கனவே ஒரு பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால்,கிள்ளியப்பன் தங்கச்சி புருஷனை சலையாரின் ஆட்கள் கொன்றுவிடுகின்றனர். அந்த கேஸ் சம்பந்தமாக தற்போது ஜெயிலுக்குள் போக வேண்டிய சூழ்நிலை வருகிறது. அப்போது சலையாரின் ஆட்களுள் ஒருவரான துறை அதனை மறுக்கிறார், காரணம் துறைக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்திருக்கும்.
இதனை அறிந்த கதாநாயகனின் அண்ணன் தனது நண்பன் துறைக்காக தான் அந்த கேஸை வாங்கிக்கொண்டு ஜெயிலுக்குள் செல்கிறார். அதன்பிறகு கிள்ளியப்பனின் ஆட்கள் துறையை கொலை செய்துவிடுகின்றனர். இந்த பிரச்சனைக்குள் வரவே கூடாது என இருந்த கதையின் நாயகன் இதற்குள் எப்படி வருகிறார் என்பதும், தன் அண்ணனின் நண்பனான துறையின் கொலைக்காண காரணத்தை கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதும் அந்த கொலைக்கான பின்னணி என்ன என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் MR.மாதவன், நாம் இதுவரை பார்த்த வடசென்னை கதைக்களத்திலிருந்து சற்று வித்யாசமாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
அறிமுக நாயகன் உதய்குமாரின் அசத்தலான நடிப்பு
பல அறிமுக நடிகர்களின் நடிப்பு
போபோ சசியின் இசை
வசனங்கள்
ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
படத்தின் வேகத்தை குறைத்த இரண்டாம்பாதி கதைக்களம்
படத்தின் நீளம்
Rating : ( 3/5 )