DSP கதை
கதையின் நாயகன் வாஸ்கோடகாமா வின் ( விஜய் சேதுபதி ) அப்பா ஒரு பூக்கடை வைத்திருக்கிறார் , இவருக்கு எப்படியாவது தனது மகனுக்கு ஒரு அரசாங்க வேலை வாங்கிக்கொடுத்தாக வேண்டும் என்று போராடுகிறார், அந்த அரசு வேலைக்காக முட்டை ரவி என்பவரிடம் உதவி கேட்கிறார் , பிறகு அவரிடமிருந்து ஒதுங்கி கொள்கிறார் , வாஸ்கோடகாமா வின் நண்பனின் அப்பாவை முட்டை ரவி கொலை செய்திருப்பார் , ஆனால் அதனை யாரும் எதிர்த்து கேட்க மாட்டார்கள் . பிறகு இவரின் தங்கை திருமணத்திற்காக வாஸ்கோடகாமா வின் நண்பர்கள் இவரின் ஊருக்கு வந்திருப்பார்கள், அப்போது முட்டை ரவிக்கும் வாஸ்கோடகாமா வின் நண்பர்களுக்கும் சிறு தகறாரு நடக்கிறது , அந்த தகராறில் வாஸ்கோடகாமா உள்ளே வருகிறார், அதனால் இவருக்கும் முட்டை ரவிக்கும் இடையில் சண்டை ஆரம்பிக்கிறது அப்போது முட்டை ரவி வாஸ்கோடகாமா வை கொன்று விடுவதாக சொல்கிறார், பிறகு வாஸ்கோடகாமா வின் அப்பா முட்டை ரவியிடம் தன் பிள்ளைக்காக கெஞ்சுகிறார். இதெல்லாம் தெரிந்த பிறகு வாஸ்கோடகாமா தன்னால் தனது குடும்பம் படும் கஷ்டத்தை உணர்கிறார். தனது அப்பாவை அசிங்கப்படுத்திய முட்டை ரவியை பழி தீர்க்க DSP- ஆக முடிவு செய்கிறார், இவர் DSP ஆகி தனது பழியை தீர்த்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை…
இதனை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார்
Read Also: Gatta Kusthi Movie Review
படத்தில் சிறப்பானவை
விஜய் சேதுபதியின் நடிப்பு
இமானின் இரண்டு பாடல்கள்
அறிமுக நடிகை அணு கீர்த்திவாஸ்-ன் நடிப்பு
படத்தில் கடுப்பானவை
கதைக்களம்
கடுப்பேத்திய சில காமெடிகள்
Rating: ( 2.75/5 )