J.பேபி தமிழ் திரைப்பட விமர்சனம்

J.பேபி கதை

கதையின் ஆரம்பத்தில் செந்தில் (மாறன்), சங்கர் (அட்டகத்தி தினேஷ்) இருவருக்கும் காவல்நிலையத்திலிருந்து போன் வருகிறது. பிறகு இருவரும் காவல்நிலையம் செல்கின்றனர். அங்கு சென்ற பிறகுதான் இவர்களின் அம்மா J.பேபி, சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு ரயில் ஏறி சென்றிருப்பது தெரியவருகிறது.

காவல் அதிகாரி இவர்கள் இருவரையும் கண்டித்து, பிறகு கொல்கத்தாவிற்கு சென்று அம்மாவை கண்டுபிடித்து அழைத்துவர சொல்கிறார். அண்ணன் தம்பி இருவரும் குடும்ப பிரச்சனையால் 3 வருடம் பேசாமல் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து J. பேபியை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதும் J. பேபி கொல்கத்தா சென்றதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் சுரேஷ் மாரி மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதாபாத்திரகள் தேர்வு
➡ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், மாறன் ஆகியோரின் சிறப்பான நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡செண்டிமெண்ட் காட்சிகள்

படத்தில் கடுப்பானவை

➡இரண்டாம்பாதியில் வரும் படத்தின் வேகத்தை குறைக்கும் ஒருசில காட்சிகள்
➡படத்தின் நீளம்

Rating: ( 3.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *