ஜெயிலர் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஜெயிலர் கதை

கதையின் நாயகன் முத்துவேல் பாண்டியன் ஓய்வு பெற்ற ஜெயிலராக இருக்கிறார். தன் மனைவி, பிள்ளை, பேரப்பிள்ளை என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார். முத்துவேல், மகன் அர்ஜுன் காவல் அதிகாரியாக இருக்கிறார். அவர் ஒரு சிலை திருட்டு கேஸை விசாரிக்கும்போது காணாமல் போகிறார்.

காணாமல் போன தன் மகனை தேட ஆரம்பிக்கும் முத்துவேல் பாண்டியன், ஒருகட்டத்திற்கு மேல் இதற்கு யாரெல்லாம் காரணம் என்று தேடி கண்டுபிடித்து கொன்றுவிடுகிறார். அப்படி இவர் அர்ஜுனை தேடும் போது என்னென்ன சிக்கல்களை எதிர்கொண்டார் என்பதும், கடைசியில் தன் மகனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் நெல்சன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡அனிருத்தின் இசை
➡ஒளிப்பதிவு
➡இடைவேளை காட்சி & க்ளைமேக்ஸ் காட்சி

படத்தில் கடுப்பானவை

➡படத்தின் வேகத்தை குறைக்கும் இரண்டாம்பாதி கதைக்களம்
➡நம்மை கதையுடன் இணைக்காத அப்பா, மகன் பாசம்

Rating: ( 3.25/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *