ஜோ கதை
கதையின் நாயகன் ஜோ, கோயம்புதூரில் கல்லூரியில் படிக்கிறார், அப்போது அங்கு சுஜி என்கிற மலையாள பெண்ணை காதலிக்கிறார். கல்லூரி முடியும் நிலையில் சுஜியிடம் இன்னும் 2 வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொள்வதாக சொல்கிறார்.
நாயகன் ஜோ சுருதி என்ற வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். ஆனால் சுருதிக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை, காரணம் சுருதி வேறொரு பையனை காதலிக்கிறார். இதனை அறிந்த ஜோ சுருதியை அவர் விரும்பியவருடன் சேர்த்து வைத்தாரா? இல்லையா? என்பதும், நாயகன் ஜோ எதற்காக தான் காதலித்த சுஜியை விட்டுவிட்டு சுருதியை திருமணம் செய்துகொண்டார் அதற்கான காரணம் என்ன என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ஹரிகரன் ராம் அவர்கள் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡முக்கிய மூன்று கதாபாத்திரங்களின் நடிப்பு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡சித்துவின் பின்னணி இசை & பாடல்கள்
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡இடைவேளை காட்சி
படத்தில் கடுப்பானவை
➡ஒருசில காதல்படங்களின் சாயல்
Rating: ( 3.5/5 )