கருமேகங்கள் கலைகின்றன கதை
ஓய்வுபெற்ற நீதிபதியாக இருக்கும் தன் தந்தை ராமநாதனுக்கு. 75 வது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும் என நினைக்கிறார் மகன் கெளதம். ஆனால் கெளதம் உடன் பிறந்த சகோதரனும், சகோதரியும். வெளிநாட்டில் இருக்கின்றனர், இருந்தாலும் இந்த பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட நினைக்கும் கௌதம் வேலையின் காரணமாக வெளியில் சென்றதால் பிறந்தநாளை சரியாக கொண்டாடமுடியவில்லை.
Read Also: Lucky Man Movie Review
13 வருடங்களுக்கு முன்பு, அமுதவள்ளி என்ற பெண் அனுப்பிய கடிதம் ராமநாதனுக்கு எதார்த்தமாக கிடைக்கிறது. வீட்டில் யாரிடமும் சொல்லாமல் அமுதவள்ளியை தேடி அந்த கடிதத்தில் இருக்கும் முகவரிக்கு செல்கிறார். அப்படி சென்ற இவர் அமுதவள்ளியை தேடி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும், யார்? அந்த அமுதவள்ளி என்பதும் மற்றும் இவர் வாழ்வில் யோகிபாபு எப்படி வருகிறார் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் தங்கர் பச்சான் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡GV. பிரகாஷின் பாடல் & பின்னணி இசை
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின்
➡குறிப்பாக பாரதிராஜா அவர்களின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡ஒருசில வசனங்கள்
படத்த்தில் கடுப்பானவை
➡மேலும் மெழுகேற்றப்படாத முதல்பாதி திரைக்கதை
➡காலகாலமாக கண்ட கதை
Rating: ( 2.75/5 )