ரங்கோலி கதை
அரசு பள்ளியில் படித்துவரும் கதையின் நாயகன் சத்யா, அங்கு நண்பர்களுடன் சண்டை போட்டதால். அந்த பிரச்சனை காவல் நிலையம் வரை செல்கிறது. இதனால் சத்யாவிற்கு பள்ளியை மாற்ற அவரின் பெற்றோர்கள் முடிவெடுக்கின்றனர். வேறு பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று கூறும் சத்யா ஒரு கட்டத்தில்
ஒத்துக்கொண்டு CBSE பள்ளியில் சேருகிறார்.
Read Also: Karumegangal Kalaigindrana Tamil Movie Review
சத்யா புதிதாக சேர்ந்த பள்ளியிலும் மற்ற மாணவர்களுடன் சண்டை ஏற்படுகிறது. சத்யா லோக்கல் பையன் என்பதால் அனைத்திற்கும் இவனையே காரணம் காட்டுகின்றனர். பள்ளியிலிருந்து TC கொடுக்கும் அளவிற்கு சென்றும் சில காரணத்தால் சத்யாவை மன்னித்து விடுகின்றனர். இந்த தனியார் பள்ளியில் அதிகமாக பணம் கட்ட வேண்டும் என்பதால் சத்யாவின் , அப்பா, அம்மா, அக்கா, என அனைவரும் கஷ்டப்படுகின்றனர். இதனையெல்லாம் பார்த்த சத்யா, அந்த பள்ளியில் உள்ள பிரச்சனைகளை சமாளித்து நன்றாக பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
➡மெல்ல நகரும் கதைக்களம்
➡மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை
Rating: ( 2.5/5 )