பரம்பொருள் தமிழ் திரைப்பட விமர்சனம்

பரம்பொருள் கதை

நாகை மாவட்டதில் உள்ள சிலை கடத்தும் நபரிடம் வேலைசெய்கிரார் கதையின் நாயகன் அமிதாஷ். ஒரு சிலை விஷயத்தில் இவர் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுகிறார். இதனால் வேலையிழந்த அமிதாஷ் தன் சூழ்நிலை காரணமாக வீடு வீடாக சென்று திருட ஆரம்பிக்கிறார். அப்படி திருடும்போது போலீஸ் அதிகாரியான சரத்குமார் வீட்டில் திருடி மாட்டிக்கொள்கிறார் அமிதாஷ்.நீதி, நியாயம், நேர்மை என அனைத்திற்கும் அப்பாற்பட்டவராக இருக்கும் சரத்குமார், எந்த செயலுக்கும் லஞ்சம் வாங்கிக்கொண்டு தான் செய்வர், அப்படிப்பட்ட இவருக்கு சிலை சம்பந்தமான சில விஷயங்கள் கிடைக்கின்றன.

Read Also: Rangoli Tamil Movie Review

சரத்குமார், அமிதாஷ் – ஐ மிரட்டி இவர் இதற்குமுன் வேலை செய்த சிலை கடத்தல் கும்பலை பற்றி தெரிந்துகொண்டு சில திட்டம் போடுகிறார், அதே போல் அமிதாஷ் சரத்குமாரிடம் இருந்து தப்பிக்க திட்டம் போடுகிறார், ஒரு கட்டத்தில் சிலையும் கிடைக்கிறது. அதனை விற்க போகும்போது எதிர்பாராதவிதமாக அந்த சிலை உடைந்துவிடுகிறது. இதற்கடுத்து என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை அறிமுக இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡யுவனின் பாடல்கள் & பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு

படத்தில் கடுப்பானவை

➡மேலும் மெழுகேற்றப்படாத முதல்பாதி கதைக்களம்

Rating: ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *