நதியின் கதை
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து குடும்பத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல போராடுபவர்தான் கதையின்நாயகன் தமிழ் ( சாம் ஜோன்ஸ்) இவர் எப்படியாவது ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாங்கிவிட வேண்டும் என்று அதற்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்… கதையின்நாயகி பாரதியும்( ஆனந்தி ) தமிழும் கல்லூரி நண்பர்களாக இருக்கின்றனர், இந்த விஷயம் பாரதியின் குடும்பத்தினருக்கு தெரிந்து விடுகிறது மற்றும் இவர்கள் காதலிக்கிறார்கள் என்று தவறாக புரிந்து கொள்கின்றனர் இதனால் ஆத்திரமடைந்த பாரதியின் குடும்பத்தினர் தமிழை சம்மந்தமில்லாத ஒரு கேசில் மாட்டி விடுகின்றனர், நண்பர் தமிழை அந்த கேஸிலிருந்து வெளியே எடுக்க பாரதி போராடுகிறார், அப்படி பாரதி போராடும் போதுதான் தமிழ் மீது உள்ள காதலை பாரதி சொல்கிறார் பாரதியின் குடும்பத்தினர் தமிழை ஒதுக்க, தமிழ் இவர்களை விட கீழ் ஜாதியினர் என்பதும் ஒரு காரணம் இவ்வளவு பிரச்சனைக்கு பாரதியின் மாமா ( கரு பழனியப்பன் ) தான் முழு காரணம், பாரதி தமிழை அந்த கேஸிலிருந்து காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதும் தமிழ் அவர் கனவை நிறைவேற்றி பாரதியுடன் சேர்ந்தாரா ? இல்லையா ? என்பதும் பாரதியின் குடும்பத்தினர் அவர்களின் ஜாதிக்காக இன்னும் என்னென்ன செய்தார்கள் என்பது தான் மீதி கதை…
Read Also: Dejavu Tamil Movie Review
படத்தில் சிறப்பானவை
கதை
ஆனந்தி, கருபழனியப்பன், முனீஷ்காந்த், வேலாராமமூர்த்தி, இவர்களின் நடிப்பு
திப்பு நினன் தாமஸ் இசை
மதுரையை எதார்த்தமாக காண்பித்த ஒளிப்பதிவாளர் பிரபு
தாமரைச்செல்வனின் இயக்கம்
படத்தில் கடுப்பனவை
படத்தின் நீளம்
கணிக்கும்படியான இரண்டாம் பாதி கதைக்களம்
Rating: ( 3.5/5 )