அசோக்செல்வன்- ரித்துவர்மா- அபர்ணா பாலமுரளி- ஷிவாத்மிகா நடிக்கும் ‘நித்தம் ஒரு வானம்’ நவம்பர் 4ம் தேதி வெளியாகிறது

நல்ல கதையம்சம் கொண்ட ஃபீல் குட் படங்கள் எப்போதும் சினிமா பார்வையாளர்களின் முதல் தேர்வாக இருக்கும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் முக்கியமான கதையாக ‘நித்தம் ஒரு வானம்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் நவம்பர் 4ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தினை Ra. கார்த்திக் இயக்க, ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 உடன் இணைந்து தயாரித்து இருக்கிறது. படத்தில் அசோக்செல்வன், ரித்துவர்மா மற்றும் அபர்ணா பாலமுரளி & ஷிவாத்மிகா ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாழ்க்கையின் பயணத்தை மிகவும் பாசிட்டிவான முறையில் கையாண்டுள்ள இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என இயக்குநர் Ra. கார்த்திக் நம்புகிறார். படம் பார்த்து முடித்து திரையரங்குகளில் இருந்து பார்வையாளர்கள் வெளியேறும் போது நிச்சயம் கதை குறித்து பாசிட்டிவாக உணர்வார்கள். வெவ்வேறு காலக்கட்டம் மற்றும் சென்னை, சண்டிகர், மணலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா என வித்தியாசமான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழு விவரம்

இசை: கோபி சுந்தர்,
ஒளிப்பதிவாளர்: விது அய்யனா,
எடிட்டிங்: அந்தோணி,
கலை: கமல் நாதன்,
பாடல் வரிகள்: கிருத்திகா நெல்சன்,
நடன இயக்குநர்: லீலாவதி குமார்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: S. வினோத் குமார்,
ஒலிக்கலவை: T. உதயகுமார்,
ஆடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார்,
ஸ்டண்ட்: விக்கி,
படங்கள்: ஷேக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D’One, சதீஷ்,
விளம்பர வடிவமைப்பு: ஏஸ்தெடிக் குஞ்சம்மா,
புரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ்: G கண்ணன்,
தயாரிப்பு கட்டுப்பாடு: மோகன் கணேசன்,
விஷுவல் புரோமோஷன்ஸ்: Feel the Wolf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *