பிரேமலு தமிழ் திரைப்பட விமர்சனம்

பிரேமலு கதை

கதையின் ஆரம்பத்தில், கதையின் நாயகன் சச்சின் தன் நான்கு வருட ஒருதலை காதலை, காதலியிடம் சொல்கிறான். ஆனால் அவருக்கு ஏற்கனவே காதலன் இருப்பதை சொல்லிவிட்டு செல்கிறார். காதல் தோல்வியில் வீட்டுக்கு வருகிறார், சச்சினின் அப்பா அம்மா இருவரும் பேசியே பல வருடங்கள் ஆகிறது, குடும்ப பிரச்னை இப்படி இருக்க , சச்சினுக்கு UK செல்ல ஆசை இருக்கிறது, ஆனால் இந்த குடும்ப சண்டையால் எங்கேயாவது சென்றால் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார்.

Read Also: Gaami Tamil Movie Review

சச்சினின் நண்பன் ஒருவர் ஹைதராபாத் சென்று படிக்கப்போவதாக சொல்கிறார், பிறகு சச்சினும் ஹைதராபாத் கிளம்பி செல்கிறார். அங்கு ஒரு திருமண நிகழ்வின் போது கதாநாயகியை பார்க்கிறார். பிறகு காதலிக்கிறார் கதாநாயகியை எப்படியாவது அடைந்ததாக வேண்டும் என்று நினைக்கிறார். கதாநாயகிக்கு தான் வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும் என்று சில எண்ணங்கள் உள்ளது. ஆனால் அவரின் எண்ணத்திற்கு சிறிதும் ஒத்துப்போகாதவர் சச்சின். இப்படியிருக்க இவர்கள் இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் கிரிஷ்A.D மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதாபாத்திரகள் தேர்வு
➡கதாநாயகன்&கதாநாயகியின் சிறப்பான நடிப்பு
➡வழக்கமான கதையில் வித்யாசமான திரைக்கதை
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡தமிழ் டுப்பிங்
➡படம் எடுக்கப்பட்ட விதம்

படத்தில் கடுப்பானவை

➡குறை சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை

Rating: ( 3.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைகாமி தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஏப்ரல் 4 அன்று ‘கள்வன்’ ரிலீஸ் ஆகிறான்