சிங்கப்பூர் சலூன் கதை
தென்காசியில் இருக்கும் கதையின் நாயகன் கதிருக்கு, அந்த ஊரில் இருக்கும் சிங்கப்பூர் சலூன் மீது அதிக அன்பு இருக்கிறது, சிறுவயதிலேயே சலூன் தொழிலை கற்றுக்கொள்ள ஆர்வமும் இருக்கிறது, சிங்கப்பூர் சலூனின் உரிமையாளர் சாச்சா, கதிருக்கு அனைத்தையும் கற்றுக்கொடுக்கிறார். கதிருக்கு, பஷீர் என்ற நெருங்கிய நண்பனும் இருக்கிறான். கதிர் தான் பெரியவனானதும் சலோன் கடையை வைத்து மிகப்பெரிய ஆளாக வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.
தனக்கு பிடிக்காவிட்டாலும், பெற்றோருக்காக இன்ஜினியரிங் படித்து முடித்த கதிர். சென்னையில் சில சலூன்களில் வேலை செய்துவிட்டு, சொந்தமாக சலூன் தொடங்க முடிவெடுத்து, கடன்வாங்கி சிங்கப்பூர் சலூனை தொடங்குகிறார், எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு சம்பவத்தினால், சிங்கப்பூர் சலூனை நடத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது, அதனால் கடன் பிரச்சனையும் அதிகமாகிறது, கடைசியில் கதையின் நாயகன் கதிர் அணைத்து பிரச்சனைகளையும் முடித்து தான் நினைத்தபடி சிங்கப்பூர் சலூனை கொண்டுசென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் கோகுல் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡RJ பாலாஜி& சத்யராஜ் அசத்தலான நடிப்பு
➡அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡சிரிக்கவைக்கும் சில எதார்த்த காமெடிகள்
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெழுகேற்றப்படாத இரண்டாம்பாதி திரைக்கதை
➡CG ( கிராபிக்ஸ் )
Rating: ( 2.75/5 )