சார் கதை
இந்த கதை 1960 – ல் மாங்கொல்லையில் ஆரம்பிக்கிறது, கதையின் நாயகன் சிவஞானம் சிறுவனாக இருக்கிறான். சிவஞானத்தின் தாத்தா பைத்தியம் பிடித்து அலைவதால், சிவஞானத்தை பள்ளியில் உள்ளவர்கள் கிண்டலடிக்கிறார்கள். இதனால் சிவஞானம் மிகவும் வருந்துகிறான். பிறகு தாத்தா இறந்ததும் சந்தோசப்படுகிறான்.
Read Also: Rocket Driver Tamil Movie Review
1980 -ல் சிவஞானம் ஆசிரியராக இருக்கிறார். சிவஞானத்தின் அப்பாவான பொன்னரசு, தன் அப்பா இந்த ஊரில் பள்ளியை தொடங்கினார், தான் அதனை நடுநிலை பள்ளியாக மாற்றிவிட்டோம், மகன் சிவஞானம் பள்ளியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆசைப்படுகிறார். இதற்கிடையில் சிவஞானம், அதேபள்ளியில் வள்ளி என்ற ஆசிரியரை காதலிக்கிறார். கடைசியில் சிவஞானம் தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதும் அதற்கிடையில் இவர் சந்தித்த பிரச்சனை என்ன என்பதும், சிவஞானம் தன் காதலியுடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் போஸ் வெங்கட் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதைக்கரு
➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
ரேட்டிங்: (2.75 / 5)