2018 தமிழ் திரைப்பட விமர்சனம்

2018 கதை

இந்த 2018 கதை கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

ஆகஸ்ட் 9: அன்று கேரளாவில் மழை அதிகமாக பெய்யும் காரணமாக அங்கு உள்ள இடுக்கி டேமை திறந்துவிடுகின்றார், அங்கிருந்து வெளியேறும் நீர் , மற்றும் மழையின் வேகம் அதிகமாகிக்கொண்டே போகிறது, மக்களை மீட்கவும் , அவர்களுக்கு தேவையானதை செய்யவும் அரசாங்கத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறது. அதற்காக அங்கிருக்கும் சிலர் உதவுகின்றனர்.

Read Also : Kazhuvethi Moorkkan Movie Review

அன்று இரவு தண்ணீர் அதிகரித்துக்கொண்டே போவதால் அங்கிருக்கும் மக்கள் அனைவரும் பதட்டமடைகின்றனர், சூழ்நிலைகள் அனைத்துமே மிக கடுமையாக இருக்கிறது , அனைவரது வீட்டிலும் தண்ணீர் புகுந்துவிடுகிறது. சிலரின் வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விடுகிறது , அப்போது மக்கள் அவர்களால் முடிந்த உதவிகளை செய்கின்றனர் கடைசியில் இவர்கள் சந்தித்த பாதிப்பு என்ன என்பதும் யார் யாரரெல்லாம் இருந்தார்கள் , யார் யாரெல்லாம் இறந்தார்கள் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை ஜூட் ஆண்டனி ஜோசப் மிக தத்ரூபமாக இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதைக்களம்
திரைக்கதை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
ஒளிப்பதிவு
ஒலிக்கலவை
பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

கடுப்பாகும் அளவிற்கு எதுவும் இல்லை

Rating : ( 4.25/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *