பூமர் அங்கிள் தமிழ் திரைப்பட விமர்சனம்

பூமர் அங்கிள் கதை

கதையின் நாயகன் நேசம் ஒரு விஞ்ஞானி யின் மகன், இவரின் நண்பர்கள் சிறுவயதில் +18 படத்தை பார்த்ததை ஊரில் சொல்லி அவர்களை அடி வாங்க வைக்கிறார், மற்றும் சத்து மாத்திரை என கூறி ஒரு மாத்திரையை கொடுப்பார் அதனை சாப்பிட்டதால் இவர்களின் நண்பர்களில் ஒருவருக்கு காது கேட்காமல் போகிறது, ஒருவருக்கு சரியாக பேச முடியாமல் போகிறது, ஒருவருக்கு மறதி வியாதி, மற்றும் ஊர் தலைவருக்கு கண் தெரியாமல் போகிறது, இதெற்கெல்லாம் காரணம் நேசம் என்பதால் அவனை பழிவாங்க 4 பேரும் துடிக்கின்றனர்.

Read Also: Kaa – The Forest Tamil Movie Review

வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார் நேசம், ஆனால் சில காரணங்களால் மனைவியிடம் விவாகரத்து கேட்கிறார். அவரின் மனைவி நேசத்தின் சொந்த ஊரில் உள்ள அரண்மனையில் ஒரு நாள் தங்கிவிட்டு விவாகரத்து கொடுப்பதாக சொல்கிறார். நேசம் மற்றும் அவரின் மனைவி அரண்மனைக்கு வருகின்றனர், நேசம் ஊருக்கு வந்ததை அறிந்த நண்பர்கள் அவரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். கடைசியில் நேசத்திற்கு என்ன ஆயிற்று என்பதும், அவரின் மனைவி எதற்காக அரண்மனைக்கு வந்தார் என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை தில்லை ராஜா எழுத ஸ்வதேஸ் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் கதைக்களம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
➡கடுப்பேற்றும் காமெடிகள்

Rating: ( 2/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைவெப்பம் குளிர் மழை தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைSofa Boy கலக்கும் “ஸ்கூல் லீவ் விட்டாச்சு” ஆல்பம் பாடல் !!