நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் தமிழ் திரைப்பட விமர்சனம்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கதை

கதையின் நாயகன் நாய் சேகர் ( வடிவேலு ) ஊரில் உள்ள பெரிய பணக்காரர்களின் நாயை அவரின் குழுவினருடன் திருடுவார் , இதுதான் இவரின் வேலை. அப்படி ஒருநாள் நாய் சேகர் ஆனந்த் ராஜின் நாயையும் திருடிவிடுகிறார், ஆனந்த் ராஜ் அந்த ஏரியாவின் தாதா இவர் ஜெயிலிருந்து வெளியே வந்ததும் தனது நாய் காணாமல் போனதால் ஆத்திரமடைகிறார். தனது நாயை நாய் சேகரின் கும்பல்தான் திட்டுவிட்டார்கள் என தெரிந்ததும், இரு கும்பலுக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.

பிறகு நாய் சேகர் தனது பாட்டியிடம் இந்த ஊரை விட்டு வெளியே போகவேண்டும் என்று சொல்கிறார் அப்போது அவரின் பாட்டி ஒரு விஷயத்தை சொல்கிறார், திருமணமாகி உன் அப்பா அம்மவிற்கு குழந்தை பிறக்கவில்லை அப்போது ஒரு ஜோசியரிடம் சென்றதும் அவர் ஒரு நாய் குட்டியை கொடுத்தார். அதன் பிறகுதான் நீ பிறந்தாய் என்கிறார், மற்றும் அந்த நாய் நம்மிடம் இருந்தவரையிலும் நாம் மிக சநதோஷமாகத்தான் இருந்தோம் அப்போது நம்மிடம் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் நாயை திருடி சென்றுவிட்டார், அதன் பிறகுதான் நம் குடும்பம் இப்படி கஷ்டப்படுகிறது என்கிறார் பாட்டி. பிறகு நாய் சேகர் ஹய்தராபாத்துக்கு சென்று தனது நாயை திருடியவரை பழிதீர்த்து, நாயை மீட்டாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இதனை இயக்குனர் சுராஜ் அவருக்கே உண்டானாக நகைச்சுவை பாணியில் கூறியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
வடிவேலுவின் நடிப்பு
சிறப்பான இரண்டாம் பத்தி கதைக்களம்
பின்னணி இசை

கடுப்பானவை
முதல்பாதியில் வரும் சில காமெடிகள்

Rating: ( 2.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைவிஜயானந்த் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைவரலாறு முக்கியம் தமிழ் திரைப்பட விமர்சனம்