பாட்னர் தமிழ் திரைப்பட விமர்சனம்

பாட்னர் கதை

கதையின் நாயகன் ஆதி தன் சொந்த ஊரில், சொந்த தொழில் தொடங்குவதற்காக வாங்கிய 25 லட்சம் ரூபாய் பணத்தை திரும்ப தர முடியாமல் போகிறது. ஆதியிடம் பணம் கொடுத்தவரோ குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை தர வேண்டும். இல்லையென்றால் உன் தங்கையை திருமணம் செய்துகொள்வேன் என்கிறார். தன் தங்கையின் வாழக்கையை காப்பாற்ற பணத்திற்காக சென்னைக்கு வருகிறார் கதையின் நாயகன் ஆதி.

Read Also: Adiyae Tamil Movie Review

சென்னையில் தன் நண்பன் யோகிபாபுவிடம் உதவி கேட்கிறார் ஆதி, யோகிபாபு தான் வேலை செய்யும் இடத்திலேயே ஆதிக்கு வேலையும் வாங்கி கொடுக்கிறார், ஆனால் அது ஒரு திருட்டு கம்பெனி என்பது பிறகுதான் ஆதிக்கு தெரியவருகிறது. அப்போது ஒரு சைன்டிஸ்ட் வீட்டில் திருட செல்லும்போது எதிர்பாராதவிதமாக ஒரு ஊசி யோகிபாபுமேல் செலுத்தப்படுகிறது, பிறகு ஆணாக இருந்த யோகிபாபு பெண்ணாக மாறுகிறார், அப்படி பெண்ணாக மாறிய யோகிபாபுவை மீண்டும் ஆணாக மாற்ற ஆதி என்னவெல்லாம் செய்தார் என்பதும். கடைசியில் அந்த பணத்தை திரட்டி தன் தங்கையின் வாழ்க்கையை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

⚫கதைக்கரு
⚫அனைவரின் நடிப்பு
⚫குறிப்பாக ஹன்சிகாவின் நடிப்பு
⚫பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

⚫விறுவிறுப்பற்ற திரைக்கதை
⚫அடிக்கடி வரும் டபுள் மீனிங் காமெடி

Rating: ( 2.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஅடியே தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஹர்காரா தமிழ் திரைப்பட விமர்சனம்