அநீதி தமிழ் திரைப்பட விமர்சனம்

அநீதி கதை

கதையின் நாயகன் திரு, ( அர்ஜுன் தாஸ் ) உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு அடிக்கடி சில அசாதாரணமான எண்ணங்கள் தோன்றும். திரு ஒருநாள் உணவு டெலிவரி கொடுக்க செல்லுமிடத்தில், கதையின் நாயகி சுப்புவை சந்திக்கிறார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்திக்கின்றனர், அந்த சந்திப்பு கடைசியில் காதலாக மாறுகிறது.

ஒருநாள் திரு, சுப்புவிடம் தன் பிரச்சனைகளை பற்றி பகிர்ந்துகொள்கிறார். அதன்பிறகு சுப்பு ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். அப்போது அவருக்கு உதவி செய்ய வந்த திருவை அந்த பிரச்சனையில் மாட்டிவிடுகிறார் சுப்பு. இதனால் திருவுக்கு அநீதி கிடைக்கிறது. கடைசியில் திருவுக்கு இருக்கும் பிரச்சனை என்ன என்பதும். சுப்பு திருவை அந்த பிரச்சனையில் எதனால் மாட்டிவிட்டார், மற்றும் அந்த பிரச்சனை என்ன என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் வசந்தபாலன் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதைக்கரு
ஒருசில வசனங்கள்
அர்ஜுன்தாஸ் & துஷாராவின் நடிப்பு
GVP-யின் இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

மெல்ல நகரும் கதைக்களம்
மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *