அனிமல் கதை
கதையின் நாயகன் ரன்விஜய் சிங் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். ரன்விஜய்க்கு அவரின் குடும்பத்தை பிடிக்கும், அவரின் அப்பாவை மிகவும் பிடிக்கும். அவர் மீது பாசம் அதிகம், ஆனால் அவரின் அப்பா ரன்விஜய்யை கண்டுகொள்ள மாட்டார். ஒருநாள் ரன்விஜய் தன் காதலியான கீதாஞ்சலியை வீட்டிற்கு கூட்டி வருகிறார், ஆனால் ரன்விஜய் காதலுக்கு அவரின் அப்பா மறுப்பு தெரிவித்துவிடுகிறார். அதனால் ரன்விஜய் தன் காதலியை கூட்டிக்கொண்டு வீட்டைவிட்டு சென்றுவிடுகிறார்.
Read Also: Parking Movie Review
சில வருடங்கள் கழித்து நாயகனின் அப்பாவிற்கு கொலை முயற்சி நடந்திருக்கும், அதனை அறிந்த ரன்விஜய் வீட்டிற்கு வருகிறார். தன் தந்தையை கொலை செய்ய முயற்சித்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்ய முயற்சி செய்தார்கள் என தேட ஆரம்பிக்கிறார், கடைசியில் கொலை முயற்சிக்கு யார் காரணம்? என கண்டுபிடித்து பழிதீர்த்தாரா? இல்லையா? என்பதும், வீட்டை விட்டு வெளியேறிய ரன்விஜய் சில வருடங்கள் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதும், ரன்விஜய் அவரின் அப்பாவுடன் நெருக்கமானாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா அவருக்கே உண்டான பாணியில் ரத்தம் தெறிக்க, தெறிக்க இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡ரன்பிர் கபூரின் மிருகத்தனமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡சண்டைக்காட்சிகள்
➡இண்டெர்வெல் & கிளைமேக்ஸ் காட்சிகள்
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡தமிழ் டப்பிங்
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் நீளம்
➡மேலும் மெழுகேற்றப்படாத இரண்டாம்பாதி திரைக்கதை
Rating: ( 3.25/5 )