அயலான் கதை
கதையின் ஆரம்பத்தில் சைபீரியாவில் பனிமலையிலிருந்து ஒரு ஸ்பார்க் கிடைக்கிறது, அதனை ஒரு தனியார் நிறுவனம் ஆராய்ச்சி செய்து, அதில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பூமிக்கு அடியில் ஓட்டை போட்டு ஒருவகை கேஸ் எடுக்கிறது, இதனால் பூமியே அழியும் நிலை ஏற்படுகிறது. இதனை அறிந்த ஏலியன்கள் அந்த ஸ்பார்க்கை எடுக்க ஒரு ஏலியனை மட்டும் பூமிக்கு அனுப்புகிறது.
Read Also: Captain Miller Tamil Movie Review
இயற்கையின் மீதும், விலங்குகளின் மீதும் அதிக அன்பு கொண்ட கதையின் நாயகன் தமிழ், வேறு வேளைக்கு போகாமல் இருக்கிறார், பிள்ளையின் எதிர்காலம் பாதிக்க கூடாது என்பதற்காக தமிழின் அம்மா தமிழை சென்னைக்கு அனுப்புகிறார்.கடைசியில் ஏலியன் அந்த ஸ்பார்க்கை எடுத்துக்கொண்டு சென்றதா? இல்லையா? என்பதும் இதற்கிடையில் தமிழும், ஏலியனும் எப்படி சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ரவிக்குமார் மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡சிவா& ஏலியன் காம்போ
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡சிறப்பான VFX காட்சிகள்
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
➡காலகாலமாக கண்ட கதைக்கரு
➡மெல்ல நகரும் திரைக்கதை
Rating: ( 3.25/5 )