பொம்மை நாயகி தமிழ் திரைப்பட விமர்சனம்

பொம்மை நாயகி- யின் கதை

2006 கடலூரில்; யோகிபாபுவின் அப்பா பெரிய மனிதர் அவருக்கு 2 மனைவிகள், அதில் ஒரு மனைவி மேல்ஜாதியை சேர்ந்தவர் அவருக்கு பிறந்தவர்தான் அருள் தாஸ் மற்றொரு மனைவி கீழ் ஜாதியை சேர்ந்தவர் அவருக்கு பிறந்தவர்தான் யோகிபாபு. அண்ணன் அருள் தாஸுக்கு தம்பி யோகிபாபுவை பிடிக்காது , அனால் தம்பி யோகிபாபுவிற்கு அண்ணன் அருள் தாஸை பிடிக்கும். யோகிபாபுவிற்கு திருமணமாகி மனைவி, மற்றும் குழந்தை பொம்மை நாயகியுடன் சந்தோஷமாக வாழ்கிறார்.

ஒருநாள் ஊரில் திருவிழா நடந்துகொண்டிருக்கும்போது சாமிக்காக உண்டியலில் காசு சேர்த்து வைத்திருப்பர் பொம்மை நாயகி அதனை எடுக்க வீட்டிற்கு செல்லும்போது 2 பேரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிறாள், அதனை கண்ட தந்தை யோகிபாபு பொம்மை நாயகியை மருத்துவமனையில் சேர்கிறார். பிறகு நண்பர் ஹரிகிருஷ்ணனின் உதவியால், அந்த 2 நபர்கள் மேல் கேஸ் போடுகிறார் யோகிபாபு. கடைசியில் பொம்மை நாயகிக்கு நீதி கிடைத்ததா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

கடைசி 10 நிமிடங்கள் வரும் எதிர்பாராத திருப்பங்கள் படத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

இந்த கதையை இயக்குனர் ஷான் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
வசனம்
குழந்தை மற்றும் பாட்டியின் நடிப்பு
யோகிபாபுவின் எதார்த்த நடிப்பு

படத்தில் கடுப்பானவை
கடுப்பாகும் அளவிற்கு எதுவுமே இல்லை

Rating: ( 3.75/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here