தலைக்கூத்தல் தமிழ் திரைப்பட விமர்சனம்

தலைக்கூத்தல் கதை

கதையின் ஆரம்பத்தில் கதையின் நாயகனின் அப்பாவிற்கு வேலை செய்யும்போது எதிர்பாராதவிதமாக அடிபட்டு சுயநினைவிழந்து மரண படுக்கைக்கு செல்கிறார், அவரை காப்பாற்றுவதற்காக சமுத்திரக்கனி மிகவும் போராடுகிறார், அப்பாவிற்காக செய்யும் வேலையை விட்டுவிட்டு செக்யுரிட்டி வேலை செய்கிறார் சமுத்திரக்கனி.

நாள்கள் பல ஆனதும் சமுத்திரக்கனியின் மாமனார் தலைக்கூத்தல் முறைப்படி அவரை கொன்றுவிடலாம் என்கிறார், தலைக்கூத்தல் முறை என்பது உடம்பில் எண்ணெய் தேய்த்துவிட்டு பிறகு இளநீர் குடித்தால் சில மணி நேரத்திலேயே இறந்துவிடுவார்கள் இதுதான் அந்த தலைக்கூத்தல் முறை. ஆனால் சமுத்திரக்கனியோ அதனை மறுத்துவிட்டு அப்பாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று போராடுகிறார்,சமுத்திரக்கனி அவரின் அப்பாவின் உயிரை காப்பாற்றினாரா ? இல்லையா ? என்பதும், நாயகனின் அப்பா தன் உயிரை பிடித்து வைத்திருக்க காரணம் , தான் இளம் வயதில் காதலித்த பெண்ணை சாவதற்குள் எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்ற இவரின் கடைசி ஆசையும் நிறைவேறியதா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…

Read Also: Bommai Nayagi Movie Review

இந்த கதையை இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
கதைக்களம்
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை
தெளிவாக காட்டப்படாத அப்பா மகனின் உறவு

Rating: ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *