ஷங்கருக்கு பிடிவாரண்ட் – என்ன செய்யப்போகிறார் ஷங்கர் ?
சென்னை: கதை திருட்டு வழக்கு தொடர்பாக இயக்குநர் ஷங்கருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் புகார்தாரர் தரப்பு சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ஜூகிபா என்ற கதையை திருடி ஷங்கர் எந்திரன் திரைப்படம் எடுத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், 1996ஆம் ஆண்டு இனிய உதயம் என்ற தமிழ்…