டைரியின் கதை
ஊட்டியிலிருந்து கோயபுத்தூர் வரும் வழியில் உள்ள 13 வது கொண்டை ஊசி வளைவில் இரவு நேரத்தில் விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன , போலீஸ் ட்ரைனிங் முடித்த கதையின் நாயகன் வரதா, (அருள்நிதி ) மற்றும் அவருடன் ட்ரைனிங் முடித்த அனைவர்களுக்கும் ஆளுக்கொரு நிலுவையிலுள்ள கேஸ் கொடுக்கப்படுகிறது அதில் நாயகன் வரதாவிற்கு 16 வருடங்களுக்கு முன்பு புதுமண தம்பதிகளை கொலை செய்துவிட்டு அவர்களின் நகைகளை கொள்ளையடித்த கேஸ் வருகிறது, இந்த கேஸை கையிலெடுக்கும் வரதா அந்த கொண்டை ஊசி வளைவு விபத்து கேஸிற்குள் எப்படி வருகிறார் என்பதும் அந்த 13 வது கொண்டாய் ஊசி வளைவில் நடக்கும் விபத்துக்கு காரணம் என்ன என்பதையும் இவர் கையிலெடுத்த கேஸையும் முடித்தாரா ? இல்லையா என்பதுதான் மீதி கதை…
இதனை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் சில ட்விஸ்டுகளுடன் சிறப்பாக கூறியுள்ளார்
படத்தில் சிறப்பானவை
கதைக்களம் & திரைக்கதை
இயக்கம்
ஒளிப்பதிவு
அருள்நிதியின் நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
முதல் பாதியில் வரும் ஒருசில காட்சிகள்
Rating: ( 3.5/5 )