இ-மெயில் கதை
கதையின் நாயகன் அசோக் கதையின் நாயகி ராகினியை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்.நாயகி ராகினிக்கு ஆன்லைன் கேமில் அதிக ஆர்வம் இருக்கிறது, அப்போது அவருக்கு அடிக்கடி ஒரு கொரியர் வருகிறது அதில் கொடுக்கும் டாஸ்கை முடிப்பதனால் ராகினிக்கு பணம் கிடைக்கிறது, இப்படியே வாழ்க்கை சந்தோசமாக செல்கிறது.
Read Also: Lal Salaam Tamil Movie Review
இந்த ஆன்லைன் கேம் மூலமாகே ராகினிக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மனைவியை காப்பாற்ற நினைக்கிறார் அசோக். அடுத்து அசோக் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இதனால், தானே நேரடியாக களத்தில் இறங்கி தனது பிரச்சனையை தீர்க்க நினைக்கிறார் ராகினி. கடைசியில் அந்த பிரச்சனைகளை தீர்த்து தன் கணவரை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதும் அந்த பிரச்சனை என்ன?, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் SR.ராஜன் இயக்கியுள்ளார்.