எப்போதும் ராஜா கதை
கதையின் நாயகர்கள் போலீஸ் ராஜா மற்றும் வாலிபால் ராஜா இருவரும் இரட்டைப்பிறவிகள். போலீஸ் ராஜா நேர்மையான அதிகாரியாக இருக்கிறார், அவரின் நேர்மை ஒருசில அரசியல்வாதிகளுக்கு பிடிக்காமல் போகிறது. வாலிபால் ராஜாவின் கனவு இந்தியாவிற்காக வாலிபால் விளையாட வேண்டும் என்பதுதான். அதற்காக வாலிபால் ராஜா போராடிக்கொண்டிருக்கிறார். இவரையும் விளையாடவிட கூடாதென்பதற்காக சிலர் முயற்சிக்கின்றனர்.
போலீஸ் ராஜா மதுரைக்கு பணிமாற்றம் செய்யப்படுகிறார், பிறகு வாலிபால் ராஜாவை சிலர் ஒன்றுகூடி கையை உடைத்துவிடுகின்றனர் மற்றும் அவரின் தங்கையை கடத்திவிடுகின்றனர். அதன்பிறகு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் H. முருகன் இயக்கியுள்ளார்.