பதான் கதை
சிறுவயதிலிருந்தே அப்பா, அம்மா இல்லாமல் தனியாக வளரும் கதையின் நாயகன் பதான் ( ஷாருக்கான் ) ராணுவத்தில் சேர்கிறான், அப்போது ஒரு வேலையின் போது இவருக்கு பலத்த அடி ஏற்பட்டுவிடுகிறது, இதனால் இவர் ராணுவத்திலிருந்து விளக்கப்படுகிறார், பிறகு இவரைப்போலவே இருக்கும் ஒருசிலரை தேடி ஒரு குழுவை உருவாக்குகிறார் பதான்.
ரத்தவித்து எனும் ஒரு வைரஸை, ஜான் ஆப்ரகாம் இந்தியாவில் பரப்பப்போவதாக ஒரு தகவல் கிடைக்கிறது, அப்படி அந்த வைரஸ் இந்தியாவில் பரவினால் கோவிட் 19 யை விட பலமடங்கு பாதிப்பு இருக்கும் என்பதனால் அவருக்கு முன்பே ரத்தவித்து வைரஸை பதான் கண்டுபிடித்து அழித்தாரா ? இல்லையா என்பதுதான் படத்தின் மீதி கதை…
இதனை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் மிகவும் சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
படத்தை உருவாக்கிய விதம்
ஒளிப்பதிவு
பின்னணி இசை
படத்தில் கடுப்பானவை
கால காலமாக கண்ட அதே கதை
Rating: ( 3.5/5 )