பொய்க்கால் குதிரை-யின் கதை
விபத்தில் ஒரு கால் இழந்த (பிரபு தேவா ) அப்பாவும் அவரின் அழகான (பேபி ஆழியா ) குழந்தையும் மிக சந்தோஷமாக இருக்கிறார்கள் அப்பொழுது குழந்தையின் இதயத்தில் ஒரு பிரச்னை இருப்பது தெரிய வருகிறது அதனை குணமாக்க மருத்துவர்கள் 70 லட்சம் கேட்கிறார்கள் ஆனால் ஒரு சாமானிய அப்பாவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் போராடுகிறார் பிறகு உதவி செய்யும் பேரில் சிலர் இவர்களை மோசடி செய்கிறார்கள் கடைசியில் பிரபு தேவாவின் அப்பா பிரகாஷ் ராஜ் ஒரு யோசனை சொல்றிகிறார் அது என்னவென்றால் ஒரு பெரிய கம்பெனியின் ( வரலட்சுமி ) மகளை கடத்திவிட்டால் உன் மகளை காப்பாற்றி விடலாம் என்கிறார், அதற்காக பிரபு தேவா பல திட்டங்களை போடுகிறார் அவரின் திட்டங்களை அவர் சரியாக செயல்படுத்தி அவரின் குழந்தையை காப்பாற்றினாரா என்பதுதான் மீதி கதை…
இதனை இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் சில டுவிஸ்ட்களுடன் கூறியுள்ளார்
படத்தில் சிறப்பானவை
பிரபுதேவா & பேபி ஆழியாவின் நடிப்பு
இமானின் இசை
இயக்கம்
படத்தில் கடுப்பனவை
திரைக்கதை
கணிக்கும் படியான கதைக்களம்
Rating: ( 3/5 )