பிரியமுடன் ப்ரியா கதை
கதையின் நாயகி ப்ரியா ரேடியோ மிர்ச்சியில் RJ – வாக வேலை செய்கிறார், அதில் பிரியமுடன் ப்ரியா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார். ப்ரியாவிற்கு திருமணம் நடக்கவிருப்பதால் ரேடியோ மிர்ச்சியில் தனது பிரியமுடன் ப்ரியா நிகழ்ச்சியை நிறுத்த முடிவெடுக்கிறார். ப்ரியா கடைசி நாள் வேளைக்கு செல்லும்போது அவருக்கு ஒரு கடிதம் கிடைக்கிறது. அதில் அந்த நிகழ்ச்சியை நிறுத்தக்கூடாது என்று கொலை மிரட்டல் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் ப்ரியா அதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்.
Read Also: Saandrithazh Movie Review
நாயகி ப்ரியா தனது பிரியமுடன் ப்ரியா நிகழ்ச்சியை தொகுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவரின் வீட்டினுள் ஒரு மர்மமான நபர் புகுந்து ப்ரியாவின் அக்கா, மற்றும் அக்காவின் பிள்ளைகளை கடத்தி விடுகிறான். பிறகு ப்ரியாவிடம் அந்த பிரியமுடன் ப்ரியாநிகழ்ச்சியை நிறுத்தக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுகிறான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ப்ரியா தனது அக்கா மற்றும் அக்கா பிள்ளைகளை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதும், அந்த மர்ம நபரை யார் என்று கண்டுபிடித்து இந்த பிரச்னையிலிருந்து வெளியே வந்தாரா?, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் A.J. சுஜித் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
அனைவரின் நடிப்பு
அசோக் & லீஷா வின் எதார்த்த நடிப்பு
இசை
படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் இரண்டாம்பாதி கதைக்களம்
Rating: ( 2.5/5 )