சத்தமின்றி முத்தம் தா கதை
கதையின் நாயகி சந்தியாவை 2 பேர் தனித்தனியாக கொல்ல முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பிக்கும் சமயத்தில் கீழே விழுந்து அடிபடுகிறது. அப்போது வீட்டிற்கு வரும் கதையின் நாயகன் விக்னேஷ், சந்தியாவை பார்த்ததும் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். பிறகு மருத்துவர்கள் சந்தியா பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்துவிட்டதாக சொல்கிறார்கள்.
Read Also: Athomugam Tamil Movie Review
நாயகன் விக்னேஷ் ஒவ்ஒருவராக தேர்வு செய்து கொலை செய்கிறார். இப்படி தொடர்ந்து நடக்கும் கொலைகளுக்கான காரணத்தையும், யார் என்பதையும் தேடி, காவல் அதிகாரியான எட்வர்ட் தேடிக்கொண்டிருக்கிறார். அப்போது விக்னேஷ் நான் தான் உன் கணவர் என கூறி சந்தியாவை வீட்டிற்கு அழைத்து செல்கிறார். ஆனால் சந்தியாவிற்கு ஒருகட்டத்தில் விக்னேஷ் ஒரு கொலைகாரன் என்பது தெரியவருகிறது. அதன்பிறகு என்னவெல்லாம் ஆயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ராஜ்தேவ் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡ஸ்ரீகாந்த் & ப்ரியாவின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
➡அதிகப்படியான 18+ காட்சிகள்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை
Rating: ( 2.5/5 )