சாட் பூட் த்ரி தமிழ் திரைப்பட விமர்சனம்

சாட் பூட் த்ரி கதை

கைலாஷ், பல்லவி, பள்ளு இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர். மற்றும் ஒரே அபார்ட்மெண்டில் வசித்து வருகின்றனர். தனது நண்பர்களுக்கு தம்பி இருப்பதை பார்த்த கைலாஷ், அவரின் பெற்றோரான சாமிநாதன், ஷாமலா – விடம் தனக்கு தம்பி பாப்பா வேண்டும் என்று கூறுகிறான். IT கம்பெனியில் பரபரப்பாக வேலை செய்யும் இவரின் பெற்றோர்கள், கைலாஷ் சொல்வதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

கைலாஷ் பிறந்தநாளுக்கு அவனின் நண்பர்கள் ஒரு நாய் குட்டியை பரிசளிக்கின்றனர். அந்த நாய்க்குட்டிக்கு MAX என பெயர் வைத்து, நாய்குட்டியுடன் கைலாஷ் சந்தோஷமாக இருக்கிறான். நாய்குட்டியும் வளர்கிறது. ஒருநாள் திடீரென்று அந்த MAX காணாமல் போகிறது. செல்லப்பிராணி MAX ஐ கைலாஷ் தனது நண்பர்களுடன் இணைந்து கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும், இதற்கிடையில் இவர்கள் சந்தித்த இன்னல்கள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை…

இந்த சாட் பூட் த்ரி திரைப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படமாகும்.

இந்த கதையினை இயக்குனர் அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡சிறுவர்களின் சிறப்பான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡இதுபோன்ற கதைக்களத்தில் நாம் ஏற்கனவே பார்த்த சில படங்களின் சாயல்

Rating: ( 3/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *