பைரி கதை
நாகர்கோவில் பகுதிகளில் இருக்கும் இளைஞர்ளுக்கு புறா பந்தயம் விடும் பழக்கம் இருக்கிறது. அங்கு வசிக்கும் கதையின் நாயகன் ராஜலிங்கம் அந்த புறா பந்தயத்தை பார்த்து வளர்கிறான், அதனால் இவனுக்கு புறா பந்தயத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால் நாயகனின் அம்மாவிற்கு ராஜலிங்கம் புறா பந்தயம் விடுவது பிடிக்கவில்லை. அதற்கு காரணம் அந்த பகுதியில் இருக்கும் அனைவரின் வாழ்க்கையும் புறா பந்தயத்தில் பாழாய் போய் இருக்கும்.
Read Also: Ninaivellam Neeyada Tamil Movie Review
தன் மகனை எப்படியாவது படிக்கவைத்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று ராஜலிங்கத்தின் அம்மா ஆசை படுகிறார். ஒருநாள் புறா பந்தயத்தில் சுயம்பு என்கிற ரவுடிக்கும், ராஜலிங்கத்துக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அதன்பிறகு ராஜலிங்கத்தின் வாழ்க்கை என்னாயிற்று என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை அறிமுக இயக்குனர் ஜான் கிளாடி இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡புறா பந்தயம் பற்றிய புரிதல்கள்
➡அனைவரின் நடிப்பு
➡கதாநாயகனின் கச்சிதமான நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
படத்தில் கடுப்பானவை
➡படத்தின் நீளம்
➡அதிகப்படியான ரத்தம் தெறிக்கும் காட்சிகள்
Rating: ( 3.25/5 )