பாம்பாட்டம் தமிழ் திரைப்பட விமர்சனம்

பாம்பாட்டம் கதை

மஹாராஷ்டிராவில் உயர் காவல் அதிகாரியாக பொறுப்பேற்கிறார் பூமிநாதன், அப்படி பொறுப்பேற்ற பிறகு அந்த ஊரில் அட்டகாசம் செய்துகொண்டிருக்கும் ரவுடியை என்கவுண்டர் செய்கிறார். இவர் ஒரு நேர்மையான அதிகாரி, தன் சொந்த மகனே தவறு செய்தான் என்பதற்காக சிறையில் அடைந்தவர். அதேசமயம் அங்குள்ள நாகமதி அரண்மனைக்குள் யாரெல்லாம் செல்கிறார்களோ அவர்கள் மர்மமான முறையில் இறந்துபோகிறார்கள்.

Read Also: Byri Tamil Movie Review

நாகமதி அரண்மனைக்குள் நடக்கும் மர்மமான சாவுக்கெல்லாம் யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க பூமிநாதன் அரண்மனைக்குள் செல்லும் சமயத்தில், அவரின் மகன் சரவணன் அப்பாவுக்கு எதுவும் ஆக கூடாது என்பதற்காக அவரை கடத்தி வைத்துவிட்டு சரவணன் அரண்மனைக்கு செல்கிறார். கடைசியில் இந்த மர்மமான சாவுக்கெல்லம் யார் காரணம் என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதும் சரவணன் அரண்மனையிலிருந்து பத்திரமாக வெளியேறினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் வடிவுடையான் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡அனைவரின் நடிப்பு
➡அம்ரிஷின் பின்னணி இசை
➡படத்தொகுப்பு
➡ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡குழப்பமான திரைக்கதை
➡படம் எடுக்கப்பட்ட விதம்

Rating: ( 2.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *