தண்டட்டி கதை
தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி என்கிற கிராமத்தில் தங்கம் என்கிற பாட்டி 4 நாட்கள் காணாமல் போகிறார், அவரை கண்டுபிடிக்குமாறு , பாட்டியின் பேரன் போலிஷ் ஸ்டேஷனில் கம்ப்ளைண்ட் கொடுக்கிறார், இவர்கள் கிடாரிப்பட்டி என்றதும் போலீஸ் அனைவரும் அந்த கிராமத்திற்கு போக தயங்குகின்றனர் காரணம் அந்த ஊரில் போலீசை அனுமதிக்கமாட்டார்கள், கடைசியாக விரைவில் பணி முடியும் தருவாயில் இருக்கும் ஹெட் காஸ்டபிள் பசுபதி அந்த பாட்டியை கண்டுபிடித்துத்தர முன் வருகிறார்.
Read Also: Paani Poori Web Series Review
நீண்ட தேடுதலுக்கு பிறகு பாட்டி கிடைத்துவிடுகிறார், ஆனால் சில நிமிடங்களிலேயே இறந்துவிடுகிறார், அப்போது , பேரன் பாட்டியின் இறுதி சடங்கு முடியும் வரை இருக்குமாறு பசுபதியை அறிவுறுத்துகிறார். காரணம் பாட்டியின் நான்கு மகள்கள் தண்டட்டியை யார் எடுப்பது என திட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றனர். கிடாரிபட்டிக்கு சென்றதும் பாட்டியின் தண்டட்டி காணாமல் போகிறது, அந்த தண்டட்டியை யார் எடுத்தது என பசுபதி கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதும் அந்த ஊருக்கு சென்ற பிறகு பசுபதிக்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் ராம் சங்கையா மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
பசுபதி , ரோஹிணி , முகேஷ் நடிப்பு
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
இசை
ஒளிப்பதிவு
ஒருசில வசனங்கள்
படத்தில் கடுப்பானவை
மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை
Rating : ( 3.5/5 )