வாரிசு கதை
ராஜேந்திரன் ( சரத்குமார் ) ஒரு கம்பெனியை வைத்து நடத்துகிறார், அதனை அவரின் இரண்டு மகன்களும் பார்த்துக்கொள்கின்றனர், தனது மூன்றாவது மகனும் கம்பெனியை பார்த்துக்கொள்ளவேண்டும் என ராஜேந்திரன் நினைக்கிறார் , ஆனால் கதையின் நாயகன் விஜய் அதனை மறுக்கிறார் இதனால் அவரின் அப்பா கோபப்பட்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுகிறார், அதன்பிறகு 7 வருடங்கள் கதையின் நாயகன் விஜய் தனக்கான வாழ்க்கையை வாழ்கிறார்.
பிரகாஷ் ராஜுக்கும், ராஜேந்திரனுக்கும் தொழில் ரீதியான சண்டை ஏற்பட்டு விடுகிறது , இதனை பற்றி அறிந்த கதையின் நாயகன் விஜய் அந்த பிரச்சனையை தீர்த்தாரா ? இல்லையா ? என்பதும் தனது குடும்பத்தில் மீண்டும் இணைந்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…
இதனை இயக்குனர் வம்சி மிக சிறப்பாக இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
தமிழ் வசனம்
இயக்குனர் வம்சியின் இயக்கம்
பாடல்கள்
தமனின் பின்னணி இசை
ஒளிப்பதிவு
படத்தில் கடுப்பானவை
மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
Rating: ( 3.5/5 )