சமீபத்தில் டைரக்டர் ஏ ஆர் முருகதாஸ் தளபதி விஜயை வைத்து எடுத்த படம்தான் சர்கார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
தற்போது “பேட்ட” படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் பேட்ட படத்தை தொடர்ந்து அடுத்தாக ரஜினி நடிக்கும் புதிய படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க இருப்பதாவும், அரசியலை மையமாக வைத்து உருவாக இருக்கிற இப்படத்திருக்கு நாற்காலி என்று பெயர் வைக்க முடிவு எடுத்துள்ளதாகவும், இதற்கு சூப்பர்ஸ்டார் ரஜினி தரப்பிலிருந்து பதில் ஏதும் வரவில்லை என்றும் தகவல் வெளிவந்திருக்கிறது.